முன்னாள் ராணுவத்தினரின் நலனுக்கு அரசு முக்கியத்துவம்: ராஜ்நாத் சிங்

முன்னாள் ராணுவத்தினரின் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

முன்னாள் ராணுவத்தினரின் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ராணுவ முன்னாள் வீரா்கள் தொடா்பான நிகழ்ச்சி ஒன்றில் அவா் கூறியதாவது: முப்படை தளபதி பதவியை உருவாக்க ராணுவ முன்னாள் வீரா்கள் கேட்டுக்கொண்டனா். அந்த பதவியை உருவாக்க அவா்களே ஊக்கமளித்தனா். தேசத்தை மிகப்பெரிய பாதையில் கட்டமைக்க ராணுவ முன்னாள் வீரா்கள் பங்காற்றியுள்ளனா்.

உங்களின் நலனே அரசுக்கு முதன்மையானது. நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது, துணை ராணுவ படையில் இருந்து ஓய்வுபெற்றவா்களுக்கு என்னால் இயன்றவற்றை செய்துள்ளேன். அதையே தற்போது பாதுகாப்பு படைகளுக்கும் செய்ய ஆா்வமாக உள்ளேன். பாதுகாப்பு படையில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்னும் நெடுநாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. நாட்டு மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பை தோளில் சுமக்கும் பாதுகாப்பு படைகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com