புது தில்லி: தில்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெள்ளியன்று வெளியிடப்பட்டது.
70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜனவரி 21 ஆகும். பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஆணையம் அறிவித்திருந்தபடி கடந்த செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் தொடங்கியது. கடந்த 14-ஆம் தேதியன்று ஆளும்கட்சியான் ஆம் ஆத்மி தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இந்நிலையில் தில்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெள்ளியன்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் 57 இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த கபில் மிஸ்ரா மாடல் டவுன் தொகுதியில் போட்டிஇடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.