புது தில்லி: சாலை விபத்தில் படுகாயமடைந்த பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
மும்பை அருகே சனிக்கிழமையன்று நிகழ்ந்த சாலை விபத்தில் மூத்த பாலிவுட் நடிகை ஷபனா ஆஸ்மி பலத்த காயமடைந்தார். மும்பை - புனே விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த ஷபனா ஆஸ்மியின் கார், மும்பையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள கலாபூரில் சனிக்கிழமை மாலை விபத்துக்கு ஆளானது. கார், டிரக்கில் மோதியதால் ஷபனாவுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, மஹாராஷ்டிராவின் ரைகட் மாவட்டத்தின் பன்வேல் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஷபனா அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடைபெற்ற இடத்தின் அருகே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சாலை விபத்தில் படுகாயமடைந்த பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஞாயிறன்று வெளியிட்டுள்ள பதிவில், விபத்தில் ஷபானா ஆஸ்மி சாலை விபத்தில் காயமடைந்துள்ள செய்தி மிகுந்த துயரளிகிறது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.