இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது ஒருநாள் போட்டியை மையப்படுத்தி தலைநகர் தில்லியில் சூதாட்டம் நடைபெறுவதாக குற்றவியல் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 11 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 70 செல்ஃபோன்கள், 2 தொலைக்காட்சிகள், 7 லேப்டாப்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.2 கோடி அளவுக்கு இந்த சூதாட்டம் நடைபெற்றதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளும் தலா 1 வெற்றிபெற்றிருந்த நிலையில், கடைசி ஒருநாள் ஆட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றது தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.