நேபாளத்துக்கு யாத்திரைச் சென்ற 6 பேர் செவ்வாய்க்கிழமை காலை அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளில் மூச்சுத் திணறல் காரணமாக இறந்தனர். இதில் ஐந்து குழந்தைகளும் அடக்கம்.
கேரளத்தைச் சேர்ந்த அந்தக் குழுவினர், காத்மாண்டுவில் உள்ள தமானிலுள்ள எவரெஸ்ட் பனோரமா ரிசார்ட்டில் இறந்து கிடந்ததாக ஆதாரங்கள் தெரிவித்தன.
இவர்களுள் சிலர் காத்மாண்டுவிலுள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.