குஜராத் ஜவுளிக் கடையில் பயங்கர தீ: 57 தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் அமைந்துள்ள ரகுவீர் ஜவுளிக் கடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 
குஜராத் ஜவுளிக் கடையில் பயங்கர தீ: 57 தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் அமைந்துள்ள ரகுவீர் ஜவுளிக் கடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் சுமார் 57 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.

முதல் தளத்தில் ஏற்பட்ட தீ, பின்னர் அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாலிஸ்டர் ரக ஜவுளி அதிகம் இருந்ததால் தீ எளிதாகப் பரவியது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இருப்பினும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com