குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்று உத்தரப் பிரதேசத்தில் ஷாஜமால் பகுதியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இப்போராட்டத்தில் கலந்துகொண்ட அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு கருதி அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.