குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை காங்கிரஸ் கட்சி பரிசாக அனுப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள பதிவில்,
"அரசியலமைப்புச் சட்டம் விரைவில் உங்களை வந்தடையும். நாட்டைப் பிரிப்பதில் இருந்து உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, தயவுகூர்ந்து இதைப் படியுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவுடன் அமேஸான் மூலம் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் நகலுக்கான ரசீதையும் இணைத்துள்ளது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிப்பதால், இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் விமரிசித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்த சூழலில் அரசியலமைப்புச் சட்டத்தை பிரதமருக்கு அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.