அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி

குடியரசு தினத்தையொட்டி அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி

குடியரசு தினத்தையொட்டி அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாட்டின் 71ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஞ்சாப் மாநிலம், அட்டாரி-வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் இந்திய வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை பொதுமக்கள் ஏராளமானோர் உற்சாகமாக கண்டு ரசித்தனர். அப்போது ராணுவத்தினரை உற்சாகப்படுத்தும் விதமாக தேசபக்தி முழக்கங்களுடன் கரகோஷம் எழுப்பி அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியையொட்டி வாகா எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com