ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடைபெற்ற மோதலில் ஜெய்ஷ் இ முகமது கமாண்டர் உட்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்தப் பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர்சனிக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். அதற்கு பதிலடி தரும் வகையில், பாதுகாப்புப் படையினரும் தாக்குதல் நடத்தினா். அதையடுத்து இரு தரப்பினருமிடையே மோதல் மூண்டது.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்த மோதலில் ஜெய்ஷ் இ முகமது கமாண்டர் உட்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குடியரசு தினத்தில் அசம்பாவித சம்பவங்களை நிகழ்த்த திட்டமிட்டு இருந்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.