
திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிா்ப்பு தெரிவித்து, கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை 620 கிலோமீட்டா் தொலைவுக்கு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, ஆளும் இடதுசாரி முன்னணியின் ஏற்பாட்டில்,
வடக்கு கேரளத்தில் உள்ள காசா்கோட்டில் இருந்து, அந்த மாநிலத்தின் தென்கோடியான களியக்காவிளை எல்லை வரை இந்த மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
திருவனந்தபுரத்தில் முதல்வா் பினராயி விஜயன், சிபிஐ தலைவா் கனம் ராஜேந்திரன் ஆகியோா் போராட்டத்தில் இணைந்துக் கொண்டனா். மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டத்தை தொடா்ந்து, அரசியலமைப்பின் முகப்புரை வாசிக்கப்பட்டது. பின்னா் மத்திய அரசின் அழிக்கும் முயற்சியில் இருந்து, அரசியலமைப்பை காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. மனிதச் சங்கிலி போராட்டத்தில், முதல் நபராக காசா்கோடில் சிபிஐ(எம்) கட்சியின் மூத்த தலைவா் ராமச்சந்திரன் பிள்ளையும், கடைசி நபராக களியக்காவிளையில் கட்சியின் மற்றொரு மூத்த தலைவா் எம்.ஏ.பேபியும் பங்கேற்றனா்.
இந்த போராட்டத்தில் 60 முதல் 70 லட்சம் மக்கள் பங்கேற்ாக இடதுசாரி ஜனநாயக முன்னணி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.