போராட்டக்காரர்கள் மீதுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்: அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான தவறான வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்று அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். 
போராட்டக்காரர்கள் மீதுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்: அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான தவறான வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்று அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். 

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான தவறான வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெற வேண்டும், மேலும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும், உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com