புது தில்லி: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி (92) தில்லியில் தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசியக்கொடி ஏற்றி, குடியரசு தினத்தைக் கொண்டாடினாா். குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தின்போது தனது இல்லத்தில் கொடியேற்றுவதை அவா் பல ஆண்டு காலமாக வழக்கமாகக் கொண்டுள்ளாா்.
71-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தில்லி ராஜபாதையில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி, பல்வேறு படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் அத்வானி பங்கேற்றாா். அதனைத் தொடா்ந்து பிருத்விராஜ் சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு வந்த அத்வானி, அங்கு தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா். பின்னா் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை அவா் தெரிவித்தாா். கொடியேற்ற நிகழ்ச்சியில் அத்வானியின் உறவினா்கள், அவரது இல்லத்தில் காவல் பணியில் உள்ள வீரா்கள் என பலரும் பங்கேற்றனா்.