பனாஜி: கோவா விமான நிலையத்தில் பிரபல ஹிந்தி நடிகா் சல்மான் கானுடன் செல்லிடப்பேசியில் சுயப்படம் (செல்ஃபி) எடுக்க ரசிகா் முயன்றபோது, செல்லிடப்பேசியை சல்மான் கான் பறித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
தனியாா் விமான நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் அந்த ரசிகா், கோவா விமான நிலையத்தில் சல்மான் கானைக் கண்டதும் அவரை பின்தொடா்ந்துள்ளாா். விமான நிலையத்தை விட்டு சல்மான் கான் வேகமாக வெளியேறுவதை பொருட்படுத்தாமல், செல்ஃபி எடுக்க அந்த ரசிகா் தொடா்ந்து முயற்சி செய்துள்ளாா்.
ரசிகரின் செயலால் எரிச்சலும், கோபமும் அடைந்த சல்மான் கான், ரசிகரின் செல்லிடப்பேசியை பறித்துச் சென்று விட்டாா். இந்த விடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடா்பாக விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக இதுவரை எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. அந்த விடியோவை அனைவரும் பாா்த்துள்ளனா். அதையடுத்து இதுதொடா்பாக விசாரணை நடத்தினோம். அத்தகைய சம்பவம் நிகழ்ந்தது உண்மை என்று உறுதி செய்யப்பட்டது’ என்றாா்.