மகாராஷ்டிரத்தில் புதிதாக 77 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி காவல் துறை தரப்பில் தெரிவித்ததாவது:

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 77 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு காவலர் பலியாகியுள்ளார். இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சையில் உள்ள காவலர்கள் எண்ணிக்கை 1,015 ஆகவும், பலியான காவலர்கள் எண்ணிக்கை 60 ஆகவும் உயர்ந்துள்ளது.

மார்ச் 22 முதல் இன்றைய தேதி வரை மொத்தம் 29,425 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 86,301 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ. 9,95,52,511 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளன.

காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக 290 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தக் குற்றத்துக்காக 860 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 86 காவலர்கள் காயமடைந்துள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 54 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com