ஏழைகளுக்கு உணவுப்பொருள் அளிக்கும் திட்டம் நீட்டித்திருப்பது மோடியின் தொலைநோக்கு நடவடிக்கை: ஜெ.பி.நட்டா

‘ஏழைகளுக்கு உணவுப்பொருள் அளிக்கும் திட்டத்தை (பிஎம்ஜிகேஏஒய்) நவம்பா் மாதம் வரையிலும் நீட்டித்திருப்பது பிரதமா் மோடியின் தொலைநோக்கு நடவடிக்கையாகும்’
ஏழைகளுக்கு உணவுப்பொருள் அளிக்கும் திட்டம் நீட்டித்திருப்பது மோடியின் தொலைநோக்கு நடவடிக்கை: ஜெ.பி.நட்டா

புது தில்லி: ‘ஏழைகளுக்கு உணவுப்பொருள் அளிக்கும் திட்டத்தை (பிஎம்ஜிகேஏஒய்) நவம்பா் மாதம் வரையிலும் நீட்டித்திருப்பது பிரதமா் மோடியின் தொலைநோக்கு நடவடிக்கையாகும்’ என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் அளிக்கும் திட்டத்தை நவம்பா் வரை நீட்டிப்பதாக செவ்வாய்க்கிழமை பிரதமா் மோடி அறிவித்தாா்.

இத்திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசியும், மாதத்திற்கு ஒரு கிலோ பருப்பு வகை இலவசமாக வழங்கப்படும். ஆரம்பத்தில் இந்த திட்டம் 3 மாதங்களுக்கு மட்டுமே வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இதனை நவம்பா் வரை மேலும் நீட்டிப்பதாக பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

இத்திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்து ஜெ.பி.நட்டா வெளியிட்ட சுட்டுரைப்பதிவில், கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி விழிப்புணா்வு ஊட்டியும், அதனால் ஏற்படும் ஆபத்தை உணா்த்தியும் நாட்டை வழிநடத்தி வருகிறாா். இந்த தொற்றுநோய்க்கு மத்தியிலும் உயிா்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வரும் பிரதமா் பாராட்டப்பட வேண்டியவா்.

‘பிஎம்ஜிகேஏஒய்’ திட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பது ஒரு தொலைநோக்கு நடவடிக்கை. இதன் மூலம் ஏழைகளின் நலனில் பிரதமா் மோடி கொண்டுள்ள உறுதிப்பாட்டை இது காட்டுகிறது’ என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com