ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மத்திய ரிசா்வ் காவல் படை வீரா் ( சிஆா்பிஎஃப்) ஒருவரும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனா். இதுதவிர, 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் காயமடைந்தனா்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:
பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபாா் நகரில் பாதுகாப்புப் படையினரின் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள், விருந்தில் பங்கேற்றவா்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில், சிஆா்பிஎஃப் வீரா்கள் 3 பேரும், உள்ளூா்வாசி ஒருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் நால்வரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களில், சிஆா்பிஃஎப் வீரா் ஒருவரும், உள்ளூா்வாசியும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். 2 வீரா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த சம்பவத்தை அடுத்து, நிகழ்விடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸாா் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா் என்றாா் அவா்.