கேரளத்தில் மேலும் 211 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் இன்று கரோனா தொற்றால் பாதிப்பு குறித்த விவரங்களை முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பின் மூலமாக வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கேரளத்தில் இன்று புதிதாக 211 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,964 ஆக உயர்ந்துள்ளது. இன்று 201 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,098 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளத்தில் 130 கரோனா ஹாட்ஸ்பாட்-கள் உள்ளன என்றார்.
கேரளத்தில் இன்று அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.