மாங்காய் திருடியதற்காக பலாத்காரத்துக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சிறுமி

பிகார் மாநிலத்தில் மாந்தோப்பில் சில மாங்காய்களைத் திருடிய 14 வயது சிறுமியை, பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மாங்காய் திருடியதற்காக பலாத்காரத்துக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சிறுமி


பாட்னா: பிகார் மாநிலத்தில் மாந்தோப்பில் சில மாங்காய்களைத் திருடிய 14 வயது சிறுமியை, பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கியக் குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

படௌர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அர்ஜூன் மிஷ்ராவுக்கு சொந்தமான மாந்தோப்புக்குச் சென்ற 14 வயது சிறுமி, அங்கிருந்த சில மாங்காய்களை பறித்துள்ளார். இந்த நிலையில், அவர் மாந்தோப்பில்  பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

சிறுமியை தேடிய குடும்பத்தினர், மாந்தோப்புக்கு அருகே சிறுமியின் சடலத்தைக் கண்டெடுத்தனர். அங்கு சில மாங்காய்களும் இருந்துள்ளன. இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

மாங்காய் திருடிய சிறுமியை முன்னாள் ராணுவ வீரர்தான் பலாத்காரம் செய்து கொன்றதாக, சிறுமியின் தந்தை புகாரில் தெரிவித்துள்ளார். புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில், முன்னாள் ராணுவ வீரர் தலைமறைவாகிவிட்டார். அவரது மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அறிந்து, அப்பகுதி மக்கள், முன்னாள் ராணுவ வீரரின் வீட்டை அடித்து நொறுக்கினர், அவரது மனைவியையும் சாலையில் இழுத்துச் சென்று அடித்து உதைத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com