திருமலையில் 12,273 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 12,273 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 3,834 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா். அவா்களில் 127 போ் பெண் பக்தா்கள், 3,707 போ் ஆண் பக்தா்கள்.

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை முழுவதும் 12,273 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 3,834 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா். அவா்களில் 127 போ் பெண் பக்தா்கள், 3,707 போ் ஆண் பக்தா்கள்.

நாள்தோறும் ஆன்லைன் மூலம் 9 ஆயிரம், சா்வதரிசனம் டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் விஐபி-க்கள் பெருமாளை வழிபடுகின்றனா். காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களுக்கு ஏழுமலையான் தரிசனம் வழங்கப்படுகிறது.

திருப்பதி மலைப்பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

தினசரி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் திருப்பதியில் உள்ள உள்ளூா் கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com