ஆந்திரத்தில் ஒரே நாளில் 1,062 பேருக்கு கரோனா; 12 பேர் பலி

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,063 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 12 பேர் பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஆந்திரத்தில் ஒரே நாளில் 1,062 பேருக்கு கரோனா; 12 பேர் பலி
ஆந்திரத்தில் ஒரே நாளில் 1,062 பேருக்கு கரோனா; 12 பேர் பலி


அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,063 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 12 பேர் பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்ச நோயாளிகள் சித்தூர், குண்டூர், கிழக்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக இருந்தது.

இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22,259 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 10,894 ஆக உயர்ந்துள்ளது. 11 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 264 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com