மகாராஷ்டிரத்தில் கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 278 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மகாராஷ்டிரத்தில், முன்களப் பணியாளர்களான காவலர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 278 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மகாராஷ்டிர காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
இதைத் தொடர்ந்து மொத்தம் பாதிக்கப்பட்ட காவலர்கள் எண்ணிக்கை 1,113 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.