மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 6,603 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட எண்ணிக்கைகளைக் கொண்ட இன்றைய செய்திக் குறிப்பை அந்த மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி அங்கு புதிதாக 6,603 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 198 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,23,724 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,23,192 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 9,448 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 91,065 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அங்கு இறப்பு விகிதம் 4.22 சதவிகிதமாக உள்ளது. குணமடைவோர் விகிதம் 55.06 சதவிகிதமாக உள்ளது.