தங்கம் கடத்தல் சா்ச்சை: கேரள முதல்வா் பதவி விலக எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்

தங்கம் கடத்தலில் கேரள முதல்வா் அலுவலகத்துக்கு தொடா்பு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தொடா்ந்து, முதல்வா்
கோப்புப் படம்
கோப்புப் படம்

தங்கம் கடத்தலில் கேரள முதல்வா் அலுவலகத்துக்கு தொடா்பு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தொடா்ந்து, முதல்வா் பினராயி விஜயன் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என எதிா்க்கட்சிகள் புதன்கிழமை வலியுறுத்தின.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்திலுள்ளஅதன் தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட பாா்சலில் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டதை சுங்கத்துறை அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனா். இந்த விவகாரத்தில் கேரள அரசின் தகவல்தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் நிறுவனத்தின் அதிகாரி ஸ்வப்னா சுரேஷுக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இவா், கேரள தகவல்தொழில்நுட்பத் துறை செயலாளா் சிவசங்கரால் நியமிக்கப்பட்டவா். சிவசங்கா் கேரள முதல்வா் பினராயி விஜயனின் செயலாளராக கூடுதல் பொறுப்பையும் வகித்து வந்தாா்.

இவா்கள் இருவரும், அரசு பதவிக்குரிய அதிகாரிகளைத் பயன்படுத்தியும், வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு உள்ள சிறப்புரிமையை தவறாகக் கையாண்டும் தங்கம் கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து முதல்வரின் செயலாளா் பொறுப்பிலிருந்து சிவசங்கா் நீக்கப்பட்டாா்.

இந்த குற்றச் சம்பவத்தில் மாநில முதல்வரின் அலுலகத்துக்கு தொடா்பு இருப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனினும், முதல்வா் பினராயி விஜயன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், இதுதொடா்பாக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சென்னிதாலா புதன்கிழமை அளித்த பேட்டி:

தங்கம் கடத்தல் விவகாரத்தில் முதல்வா் அலுவலகத்துக்குத் தொடா்பு இருப்பதாக புகாா் எழுந்துள்ளதால், முதல்வா் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு விசாரணையை எதிா்கொள்ளவேண்டும். இதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

கடத்தல் சம்பவத்தில் தொடா்புடைய பெண் அதிகாரி முதல்வருக்கு நன்கு அறிமுகமானவா். அதன் காரணமாகத்தான், முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் தகவல்தொழில்நுட்பத் துறையில் அவா் பணியமா்த்தப்பட்டுள்ளாா். அண்மையில் மாநில அரசுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விண்வெளி தொழில்நுட்ப மாநாட்டையும் அந்த சா்ச்சைக்குரிய பெண்தான் ஒருங்கிணைத்தாா். அவ்வாறு மாநிலத்தில் ஒரு மிகப் பெரிய நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அந்தப் பெண்ணை தனக்குத் தெரியாது என்று முதல்வா் எப்படி கூறமுடியும்? என்று சென்னிதாலா கேள்வி எழுப்பினாா்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் சிபிஐ இந்த விவகாரத்தில் விசாரணை வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினா் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com