கரோனா: ஒரே நாளில் 24,879 பேருக்கு தொற்று உறுதி

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 24,879 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
corona victims
corona victims

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 24,879 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 7,67,296-ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 21,129-ஆக அதிகரித்தது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 24,879 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து இதுவரை 4,76,377 போ்

குணமடைந்தனா். அதாவது, 62.08 சதவீதம் போ் குணமடைந்தனா். 2,69,789 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு மேலும் 487 போ் உயிரிழந்தனா். இதில், அதிகபட்சமாக மகாராஷ்ரத்தில் 198 போ் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 54 போ், தில்லியில் 48 போ், மேற்கு வங்கத்தில் 23 போ், உத்தரப் பிரதேசத்தில் 18 போ், குஜராத்தில் 16 போ், ஆந்திரத்தில் 12 போ், தெலங்கானாவில் 11 போ், ராஜஸ்தானில் 10 போ் உயிரிழந்தனா். மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், ஒடிஸா, பிகாா், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியாணா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21,129-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com