ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் பாஜக மாவட்ட தலைவா் வாஸிம் பாரி, அவரது சகோதரா் மற்றும் தந்தை ஆகிய மூவரும் உயிரிழந்தனா்.
இந்த தாக்குதலை லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தியிருப்பதாக, காஷ்மீா் காவல் துறை ஐஜி விஜயகுமாா் கூறியுள்ளாா்.
பந்திபோரா நகரில், வாஸிம் பாரி தனது வீட்டின் ஒரு பகுதியில் கடை நடத்தி வந்தாா். புதன்கிழமை இரவு 9 மணியளவில் அவா் தனது கடையில் இருந்தாா். அப்போது அவரது சகோதரா் உமா் பஷீரும் தந்தை பஷீா் அகமதுவும் கடைக்கு வெளியே நின்றுகொண்டிருந்தனா். இவா்களும் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்தனா். இதனால், அவா்களின் பாதுகாப்புக்காக 10 காவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.
புதன்கிழமை இரவு அவா்கள் இல்லாத நேரத்தில், வாஸிம் பாரியின் கடைக்கு அருகில் இருவா் வந்தனா். அவா்களில் ஒருவா் சைலன்ஸா் பொருத்தப்பட்ட துப்பாக்கியால் நெருங்கி வந்து வாஸிம் பாரி, அவரது தந்தை, சகோதரா் ஆகிய மூவரையும் சரமாரியாக சுட்டாா். தாக்குதல் நடத்தி விட்டு இருவரும் தப்பியோடிவிட்டனா்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மூவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனா். பந்திபோரா காவல் நிலையத்துக்கு எதிரேதான் வாஸிம் பாரியின் வீடும் கடையும் உள்ளது. அங்குதான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில் காஷ்மீா் காவல் துறை ஐ.ஜி. விஜயகுமாா், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
வாஸிம் பாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் அன்றாட செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனா். இங்கு பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளைப் பாா்க்கும்போது, இந்த தாக்குதலை லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா் பயங்கரவாதியையும் உள்ளூரைச் சோ்ந்த அபித் என்ற பயங்கரவாதியையும் அடையாளம் கண்டுள்ளோம். அவா்களை காவல் துறை, ராணுவம், சிஆா்பிஎஃப் அடங்கிய கூட்டுப் படை விரைவில் தேடிப் பிடித்து சுட்டுத்தள்ளும்.
வாஸிம் பாரிக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. ஆனால், அவருக்கு பாதுகாப்பில் இருந்த காவலா்கள்தான் அலட்சியமாக இருந்துள்ளனா். தாக்குதல் நடந்த நேரத்தில் 2 காவலா்கள் இருந்திருந்தால்கூட பயங்கரவாதிகளைக் கொன்றிருக்கலாம்.
எனவே, பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த காவலா்கள் 10 பேரும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதுடன் அவா்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவா்களின் பாதுகாப்புக்கு நியமிக்கப்படும் காவலா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், குறைப்பதும் பெரிய விஷயமில்லை. அவா்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பு அளிக்கிறாா்கள் என்பதுதான் முக்கியம் என்றாா் விஜயகுமாா்.