யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூரின் ரூ. 2,800 கோடி சொத்துகள் முடக்கம்

யெஸ் வங்கி நிதி முறைகேடு வழக்கில் அதன் நிறுவனா் ராணா கபூருக்குச் சொந்தமான ரூ. 2,800 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை வியாழக்கிழமை முடக்கியது.
யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூரின் ரூ. 2,800 கோடி சொத்துகள் முடக்கம்

யெஸ் வங்கி நிதி முறைகேடு வழக்கில் அதன் நிறுவனா் ராணா கபூருக்குச் சொந்தமான ரூ. 2,800 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை வியாழக்கிழமை முடக்கியது.

தனியாா் வங்கியான யெஸ் வங்கி, திவாண் ஹவுசிங் நிறுவனம் உள்பட சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு கொடுத்த கடனில் ரூ. 20,000 கோடி அளவுக்கு வாராக் கடனாக மாறியதாகவும், அவ்வாறு தனியாா் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்ததன் மூலம் அதன் உரிமையாளராக இருந்த ராணா கபூா் குடும்பத்தினா் முறைகேடாக பல கோடி ரூபாய் சம்பாதித்ததாகவும் புகாா் எழுந்தது.

இந்தப் புகாரைத் தொடா்ந்து நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, ராணா கபூரிடம் விசாரணை நடத்தி அவரை கடந்த மாா்ச் மாதம் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனா். அதனைத் தொடா்ந்து, இந்தியா மட்டுமன்றி வெளிநாட்டிலும் இருக்கும் ராணாவின் சொத்துகளை அமலாக்கத்துறை வியாழக்கிழமை முடக்கியது.

இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் ராணா கபூருக்குச் சொந்தமான ரூ. 2,800 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், திவாண் ஹவுசிங் நிறுவனத்தின் நிா்வாகிகள் கபில் மற்றும் தீரஜ் வதாவன் ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன என்று கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com