மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 6,497 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்டவை தொடர்பான தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 6,497 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 193 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,60,924 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 10,482 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 4,182 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,44,507 ஆகியுள்ளது. இன்றைய தேதியில் 1,05,637 பேர் சிக்ச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு குணமடைவோர் விகிதம் 55.38 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 4.02 சதவிகிதமாக உள்ளது.
இதுவரை 13,42,792 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 19.43 சதவிகிதமாக உள்ளது.