விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 1935 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 31 ஆயிரத்தை எட்டிவிட்டது.
இன்று ஒரே நாளில் ஆந்திர மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பாதித்த 37 பேர் பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு நாள்தோறும் ஆயிரத்தைக் கடந்து வந்த நிலையில், இன்று உச்சபட்சமாக 1,900-ஐ எட்டிவிட்டது.
இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கரோனாவுக்கு 37 பேர் பலியானதை அடுத்து ஆந்திரத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது.