புது தில்லி: கடந்த மே மாதம் நடைபெற வேண்டிய தேர்வுகள், ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம் (ஐசிஏஐ) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஐசிஏஐ நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆஜரான வழக்குரைஞர் ராம்ஜி ஸ்ரீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பதில் மனுவில், சிஏ பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடத்தப்படாது என்றும், அது 2020 நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிஏஐயின் பதில் மனுவை ஏற்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.