கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 608 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கேரளத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,930 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 4,454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.