புது தில்லி: சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன.
சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.