புது தில்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 17-ம் தேதி லடாக் பகுதிக்குச் செல்கிறார்.
இரண்டு நாள் பயணமாக லடாக் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் செல்ல உள்ளார். லடாக் பகுதிக்கு 17-ம் தேதியும், ஸ்ரீநகர் பகுதிக்கு 18-ம் தேதியும் பயணம் மேற்கொள்கிறார்.
ராஜ்நாத் சிங்குடன் ராணுவ தளபதி எம்.எம். நரவணேவும் செல்ல உள்ளார். லடாக் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.