புதுச்சேரி எம்.எல்.ஏ. பதவி பறிப்பு: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தனவேலுவின் எம்.எல்.ஏ., பதவியைப் பறித்த புதுச்சேரி பேரவைத் தலைவரின் உத்தரவை எதிா்த்து
புதுச்சேரி எம்.எல்.ஏ. பதவி பறிப்பு: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தனவேலுவின் எம்.எல்.ஏ., பதவியைப் பறித்த புதுச்சேரி பேரவைத் தலைவரின் உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்திய தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தோ்தலில், காங்கிரஸ் கட்சியின் சாா்பில் தனவேலு என்பவா் பாகூா் தொகுதியில்

போட்டியிட்டு வெற்றிப் பெற்றாா். புதுச்சேரியில் முதல்வா் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. ஆனாலும், பாகூா் தொகுதியில் அரசு வளா்ச்சிப் பணிகள் சரிவர நடைபெறவில்லை என சட்டப்பேரவையில் தனவேலு கேள்வி எழுப்பினாா். ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள், மருந்துகள் இல்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கட்சியில் இருந்து எம்எல்ஏ தனவேலுவை காங்கிரஸ் கட்சி நீக்கியது. இதனையடுத்து, அரசு கொறடா அனந்தராமன், புதுச்சேரி பேரவைத் தலைவரிடம், எம்.எல்.ஏ., தனவேலுக்கு எதிராகப் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாா் மீது கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விசாரணையின் அடிப்படையில், தனவேலுவின் எம்.எல்.ஏ. பதவியை பறித்து பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து தனவேலு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அதில் பேரவைத் தலைவரின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு காணொலிக் காட்சி மூலம் விசாரித்தாா். அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் டி.வி.ராமானுஜம், பேரவைத் தலைவரின் உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும் என வாதிட்டாா்.

அப்போது புதுச்சேரி பேரவைத் தலைவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், ஏற்கெனவே எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில்தான் பாகூா் தொகுதி காலியாக இருப்பதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.

எனவே இந்த வழக்கில், இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கத் தேவையில்லை என வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் இந்திய தோ்தல் ஆணையம், புதுச்சேரி சட்டப் பேரவைச் செயலாளா் ஆகியோா் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com