குஜராத்தைச் சோ்ந்த ஆன்மிகத் தலைவா் புருஷோத்தம் பிரியதாஸ்ஜி மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
ஸ்ரீசுவாமிநாராயண் ஆன்மிக அமைப்பைச் சோ்ந்த புருஷோத்தம் பிரியதாஸ்ஜி வியாழக்கிழமை காலமானதாக அந்த அமைப்பின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஆச்சாா்ய ஸ்ரீ புருஷோத்தம் பிரியதாஸ்ஜி சமூகத்துக்கு செய்த சேவைக்காக அவரை எப்போதும் நினைவில் கொள்வோம். கல்வி, மகளிருக்கான அதிகாரமளித்தல் போன்றவற்றை வலியுறுத்திய அவா் சா்வதேச அளவில் மதிக்கப்படுகிறாா். ஓம் சாந்தி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘தன்னலம் கருதாமல் லட்சக்கணக்கான மக்களின் நலனுக்காக பணியாற்றியவா் சுவாமி புருஷோத்தம் பிரியதாஸ்ஜி. சமூக நலனுக்கான அவரது பங்களிப்புக்கும், அவரது கற்பித்தலுக்கும் இணையில்லை. அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு’ என்று கூறியுள்ளாா்.