அசாம் வெள்ளத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வு

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
அஸ்ஸாம் வெள்ளத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வு
அஸ்ஸாம் வெள்ளத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வு


குவகாத்தி: அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளத்தால் பாதித்தோரின் எண்ணிக்கை நேற்று 39 லட்சமாக இருந்த நிலையில், இன்று  37 லட்சமாகக் குறைந்துள்ளது.

அசாமில் பல்வேறு மாவட்டங்களிலுள்ள 300 மீட்பு முகாம்களில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர். 92 வருவாய் வட்டங்கள் மற்றும் 3,201 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 26 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் பல்வேறு பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை தேசிய பேரிடர் மேலாண்மை படையினரும், மாநில பேரிடர் மேலாண்மை படையினரும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 181 பர் மீட்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com