கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது 10 லட்சத்தைக் கடந்துள்ளது. இதே நிலைமை நீடித்தால் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் பாதிப்பு 20 லட்சத்தை எட்டும்.
எனவே, தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோன்று, இந்த வாரம் கரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடக்கும் என சில நாள்களுக்கு முன்னதாகத் தான் இட்ட பதிவையும் அவர் ரீ-ட்வீட் செய்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.