புதுதில்லி: காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையில் மின் உற்பத்தி துவக்கப்பட்டதற்கு, இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையில் அணு மின் உற்பத்தி துவக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பகிர்ந்துள்ள சுட்டுரைப் பதிவில், “காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையில், அணு மின் உற்பத்தி துவக்கப்பட்டதற்கு இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்!
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 700 மெகா வாட் காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையானது, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் ஒளிரும் உதாரணமாகத் திகழ்கிறது. இது, வருங்காலத்தில் இது போன்ற பல சாதனைகள் நிகழ்த்துவதற்கு ஒரு வழிகாட்டுதலாக விளங்கும்” என்று கூறியுள்ளார்.