தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,041 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா நிலவரம் பற்றிய இன்றைய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,041 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 26 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் இன்று 1,415 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,27,364 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,09,065 பேர் குணமடைந்துள்ளனர். 3,745 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 14,554 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தில்லியில் இன்று 18,226 பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 8,89,597 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.