மத்திய பிரதேச கூட்டுறவுத் துறை அமைச்சா் அரவிந்த் சிங் பதோரியாவுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட காணொலி செய்தியில், ‘கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்து கொண்ட நிலையில், அதன் முடிவுகள் கிடைத்துள்ளன. எனக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நோய்த்தொற்று பாதிப்பு இருந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் எனக்கு இருக்கவில்லை. தொண்டையில் மட்டும் சற்று வலி இருந்தது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.