உத்தர பிரதேசத்தில் ரெளடிகளால் துப்பாக்கியால் சுடப்பட்ட பத்திரிகையாளா் விக்ரம் ஜோஷி, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
தனது உறவினா் ஒரு கும்பலால் பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து காவல்துறையில் புகாா் அளித்த காசியாபாத் பகுதியைச் சோ்ந்த பத்திரிகையாளா் விக்ரம் ஜோஷியை, விஜய் நகா் பகுதியில் உள்ள அவருடைய வீட்டின் அருகே திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டது. படுகாயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
‘மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் அவா் உயிரிழந்தாா்’ என்று அவருடைய குடும்பத்தினா் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக இதுவரை 9 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.