ஒடிசா மாநிலத்தில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட முதல் கரோனா நோயாளி, தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.
ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்த 48 வயது பெண் நோயாளி அஸ்வினி கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒடிசாவில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட முதல் பெண் நோயாளி, குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.
இதையும் படிக்கலாம்.. சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,569 ஆகக் குறைந்தது
ஒடிசாவில் தற்போது கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வரும் நிலையில், இன்று அந்த மாநிலத்தில் புதிதாக 1,594 பேருக்கு கரோனா உறதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22,693 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பு தீவிரமடையும் நிலையில், பிளாஸ்மா சிகிச்சை வெற்றி பெற்றிருப்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.