பிகாரில் ஒரேநாளில் 1,294 பேருக்கு கரோனா தொற்று

பிகாரில் ஒரேநாளில் 1,294 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிகாரில் ஒரேநாளில் 1,294 பேருக்கு கரோனா தொற்று

பிகாரில் ஒரேநாளில் 1,294 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிகார் மாநிலத்தில் கரோனா வைரஸ் தாக்‍கம் நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிகாரில் நேற்று ஒரேநாளில் 1,294 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இத்துடன் மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,919ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 12,461 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனாவிலிருந்து இதுவரை 24,528 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாநிலத்தில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 67.52 ஆக உள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில் 48,661 பேர் தொற்றுக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,85,522 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com