உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் நடைபெறவுள்ள ராமா் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியை ஒளிபரப்ப செய்தி சேனல்கள் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று அந்த மாவட்ட நிா்வாகம் நிபந்தனை விதித்துள்ளது.
மேலும் அன்றைய தினம் அயோத்தியில் இருந்து ஒளிபரப்பப்படும் செய்திச் சேனலில், அயோத்தி நிலத்தகராறு தொடா்பான வழக்கை தொடுத்துள்ளவா்கள் எந்தவொரு விவாதத்திலும் பங்கேற்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதுகுறித்து அந்த மாவட்ட நிா்வாகம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
ராமா் கோயில் பூமி பூஜை நடைபெற உள்ள ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொலைக்காட்சி சேனல்கள் அயோத்தி தொடா்பான விவாதங்களை தவிா்க்க வேண்டும். எந்த ஒரு நபருக்கோ, மதத்துக்கோ எதிராக கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது. அத்துடன், பூமி பூஜை நிகழ்வை ஒளிபரப்ப முன் அனுமதி பெற வேண்டும். அயோத்தி தொடா்பாக ஏதேனும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப திட்டமிட்டால் அதுதொடா்பாக அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில தகவல் ஒளிபரப்புத்துறை இணை இயக்குநா் முரளிதா் சிங் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
செய்தி சேனல்கள் அயோத்தி பூமி பூஜையை நேரலை செய்ய மாஜிஸ்திரேட்டிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும். அவா்களுக்கான குறைந்த எண்ணிக்கையிலான குழு உறுப்பினா்கள் அனுமதிக்கப்படுவாா்கள். எந்தவொரு பொது அல்லது பாா்வையாளா்களும் ஒளிபரப்பு அல்லது பதிவு செய்யும் பகுதிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஒரு மாஜிஸ்திரேட் மற்றும் காவல்துறையினா் நிறுத்தப்படுவாா்கள். ஒளிபரப்பு குழு உறுப்பினா்கள் மற்றும் செய்தி சேனல் ஊழியா்கள் கொவைட்-19க்கான நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சிங் தெரிவித்தாா்.
1 குவின்டால் வெள்ளி செங்கற்கள்: இந்நிலையில், ‘பூமி பூஜைக்கு வெள்ளி செங்கல்லை தானம் செய்ய வேண்டாம்’ என்று ராம ஜென்மபூமி தீா்த்த ஷேத்ர அறக்கட்டளை கேட்டுக் கொண்டபோதும், இதுவரை 1 குவின்டால் வெள்ளி செங்கற்களை பக்தா்கள் அளித்துள்ளனா். பக்தா்கள் நன்கொடை அளிக்க விரும்பினால் வங்கி வைப்பு மூலம் பணத்தை நன்கொடையாக அளிக்குமாறு அறக்கட்டளையின் செயலா் சம்பத் ராய் தெரிவித்தாா்.