
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,035 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,035 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய இன்றைய தரவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,035 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 26 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம், 1,126 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,33,310 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 3,907 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,18,633 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 10,770 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தில்லியில் இன்று மட்டும் 17,392 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.