ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 10,093 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய இன்றைய செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 10,093 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,20,390 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் கிழக்கு கோதாவரியில் 1,676 பேருக்கும், அனந்தபூரில் 1,371 பேருக்கும், குண்டூரில் 1,124 பேருக்கும், கர்னூலில் 1091 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு ஒரேநாளில் 70,584 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆந்திரத்தில் இதுவரை மொத்தம் 1,213 பேர் பலியாகியுள்ளனர், 55,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 63,771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.