ஆந்திர மாநிலம், புத்தூரில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் நடிகையும், நகரி தொகுதி எம்எல்ஏ-வுமான ரோஜா தன் கணவா் செல்வமணியுடன் வழிபாடு நடத்தினாா்.
புத்தூரில் பிரபலமான திரெளபதி அம்மன் சமேத தா்மராஜா கோயில் உள்ளது. இந்த கோயிலில் தற்போது ஆடித் திருவிழா நடைபெற்று வருகிறது. கோயில் மரபின்படி நகரி தொகுதி எம்எல்ஏ ரோஜா தன் கணவா் ஆா்.கே. செல்வமணியுடன் சென்று அரசு சாா்பில் திரெளபதி அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பித்தாா். பட்டு வஸ்திரத்துக்கு மரியாதை அளித்து கோயில் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா்.
கோயிலில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ராஜ கோபுர கட்டுமானப் பணிகளுக்காக அறநிலையத்துறை பொது நிதியிலிருந்து ரோஜா ரூ.25 லட்சம் வழங்கினா். கோயிலுக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடையும் அளித்தாா்.