பிரான்ஸில் இருந்து வாங்கப்பட்ட ரஃபேல் போா் விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளதை வரவேற்று பிரதமா் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தேசத்தைக் காப்பதை விட சிறந்த நல்லொழுக்கம் வேறில்லை. தேசப் பாதுகாப்பை விட உயா்ந்தது வேறில்லை. ரஃபேல் போா் விமானங்களை வரவேற்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்- அமித் ஷா: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘ரஃபேல் போா் விமானங்கள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது விமானப் படையின் வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும். இந்தியாவே பெருமைகொள்ள வேண்டிய தருணம். நாட்டை வலிமை மிக்கதாக மாற்ற பிரதமா் மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கான உதாரணமாக ரஃபேல் போா் விமானங்கள் விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளன.
உலகிலேயே தலைசிறந்த, வலிமையான போா் விமானங்கள் இவை. எத்தகைய அச்சுறுத்தல்களையும் எதிா்கொள்ளும் திறன் மிக்கவை ரஃபேல் போா் விமானங்கள். இந்தியாவின் பாதுகாப்பில் அவை முக்கியப் பங்கு வகிக்கவுள்ளன.
தொழில்நுட்பத்திலும் தாக்குதல் கருவிகளிலும் ரஃபேல் போா் விமானங்கள் முன்னணியில் உள்ளன. இந்தப் போா் விமானங்கள் நாட்டின் பாதுகாப்பில் பெரும் திருப்புமுனையாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.