ஆந்திரத்தில் 10,167, கர்நாடகத்தில் 6,128 பேருக்கு கரோனா

ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 10,167 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 6,128 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 10,167 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 6,128 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 10,167 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 6,128 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 10,167 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 6,128 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரம்:

ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,167 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,30,557 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 1,281 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 60,024 பேர் குணமடைந்துள்ளனர்.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் புதிதாக 6,128 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 83 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம், 3,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,18,632 ஆக உயர்ந்துள்ளது. இதில் 69,700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,230 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 46,694 பேர் குணமடைந்துள்ளனர். 

அங்கு சிகிச்சை பெற்று வருவோரில் 620 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com