அசாமில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதேநேரத்தில் இறப்பு எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அசாம் மாநிலத்தில் புதிதாக 1,348 தொற்று பதிவாகியுள்ள நிலையில் ஒட்டுமொத்த பாதிப்பு 36,295 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
புதிதாக, கம்ரூப் (மெட்ரோ) மாவட்டத்தில் 348 பேருக்கும், கம்ரூப் (கிராமப்புறம்) மாவட்டத்தில் 127 பேருக்கும் தொற்றுப் பதிவாகியுள்ளன.
இதையடுத்து, ஒரேநாளில் நான்கு பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,214 நோயிலிருந்து குணமடைந்துள்ளதை அடுத்து, 27,832 பேர் நோயிலிருந்து விடுபட்டு வெளியேற்றப்பட்டனர்.
தற்போது மருத்துவமனையில் 8,368 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.